நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

'ஃபயர் ஹேர்கட்'டால் நடந்த விபரீதம்!

ஃபயர் ஹேர்கட் செய்யும் போது இளைஞர் ஒருவருக்கு உடல் முழுவதும் தீ பரவி பாதிக்கப்பட்ட சம்பபம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 3:35 pm IST

ஃபயர் ஹேர்கட் செய்யும் போது இளைஞர் ஒருவருக்கு உடல் முழுவதும் தீ பரவி பாதிக்கப்பட்ட சம்பபம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபயர் ஹேர்கட், சமீபத்தில் பிரபலமடைந்ததுள்ளது. இது சிகை அலங்காரத்தின் ஒரு நுட்பமாகும்.  சிகை அலங்காரம் செய்யும் போது முடியை வடிவமைக்க நெருப்பைப் பயன்படுத்துகிறார்கள்.

குஜராத்தின் வாபியில் உள்ள ஒரு சிகை அலங்காரக் கடையில் புதன்கிழமை 18 வயது இளைஞன் ஃபயர் ஹேர்கட் செய்யும் போது பலத்த தீக்காயம் அடைந்தான். இச்சம்பவத்தை அடுத்து,  இளைஞர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அந்த இளைஞருக்கு கழுத்து மற்றும் மார்பில் தீக்காயங்கள் இருந்ததாக காவல்துறையினர் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

சிகை அலங்காரம் செய்வதற்காக இளைஞரின் தலையில் ஒருவித ரசாயனம் தடவப்பட்டதால், பாதிக்கப்பட்டவரின் உடல் பாகங்கள் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தின் விடியோ கிளிப் புதன்கிழமை சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில் உள்ள வாபி நகரில் உள்ள சிகை அலங்காரக் கடையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஃபயர் ஹேர்கட்டில் எந்த ரசாயனம் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.