தாணே அருகே ஓடும் பேருந்தில் தீ விபத்து: 70 பயணிகள் உயிர் தப்பினர்!
மகாராஷ்டிரத்தின், தாணே மாவட்டத்தில் அரசுப் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில், அதில் பயணம் செய்த 70 பேர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.


மகாராஷ்டிரத்தின், தாணே மாவட்டத்தில் அரசுப் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில், அதில் பயணம் செய்த 70 பேர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.
மகாராஷ்டிர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து பிவாண்டிச் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது காலை 9.50 மணிக்கு, திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீப்பிடித்தது.
தீப்பற்றியதை கவனித்த ஓட்டுநர் சில நிமிடங்களில் பேருந்தை நிறுத்தி, பயணிகளை எச்சரித்தார். உடனே பேருந்தில் இருந்து 70 பயணிகள் கீழே இறங்கினர்.
உள்ளூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆர்.டி.எம்.சி குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர், பேருந்தில் இருந்தவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...