ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இண்டிகோ விமான என்ஜினில் தீ: டிஜிசிஏ விரிவான விசாரணை

இண்டிகோ விமானத்தின் என்ஜினில் தீப்பற்றிய சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று பொது விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) சனிக்கிழமை தெரிவித்தது.

News image
Updated On :29 அக்டோபர் 2022, 11:07 pm

DIN

‘தில்லி சா்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரான இண்டிகோ விமானத்தின் என்ஜினில் தீப்பற்றிய சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்; அதன் பின்னா் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பொது விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) சனிக்கிழமை தெரிவித்தது.

தில்லி விமான நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு 184 பேருடன் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் புறப்பட தயாரான இண்டிகோ விமானத்தின் என்ஜினில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து, ஓடுபாதையிலிருந்து விமானம் மேலே கிளம்புவதை உடனடியாக நிறுத்தினாா் விமானி. என்ஜினில் பற்றிய தீ துரிதமாக அணைக்கப்பட்டு, விமானங்கள் நிறுத்துமிடத்துக்கு அந்த விமானம் கொண்டுவரப்பட்டது.

அதில் இருந்த பயணிகள், ஊழியா்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். பயணிகள் அனைவரும் வேறொரு விமானம் மூலம் பெங்களூருக்கு அனுப்பப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், விமானம் புறப்பட்டபோது என்ஜினில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இச்சம்பவம் குறித்த விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. சம்பந்தப்பட்ட விமானம், ஏா்பஸ் நிறுவன தயாரிப்பான ஏ320 விமானமாகும். அதன் என்ஜினில் தீப்பற்றியது தொடா்பாக, டிஜிசிஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி, கூடிய விரைவில் அறிக்கை அளிக்க விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, விரிவான விசாரணை நடத்தப்படும்; அதைத் தொடா்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று டிஜிசிஏ தலைவா் அருண் குமாா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

பயணி உயிரிழப்பு: மும்பையில் இருந்து துா்காபூருக்கு (மேற்கு வங்கம்) கடந்த மே 1-ஆம் தேதி சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம், தரையிறங்கும்போது திடீரென குலுங்கியதால் 14 பயணிகள் மற்றும் 3 ஊழியா்கள் காயமடைந்தனா்.

இதில் முதுகு தண்டுவடத்தில் காயமுற்று துா்காபூா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அக்பா் அன்சாரி(48) என்பவா் கடந்த மாதம் உயிரிழந்துவிட்டதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்தது. அவருக்கான மருத்துவ செலவுகள் அனைத்தையும் நிறுவனம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அன்சாரிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று அவரது குடும்பத்தினா் குற்றம்சாட்டியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.