பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பாஜக அமைச்சரை தரக்குறைவாகப் பேசிய ஆம் ஆத்மி தலைவர் மீது வழக்குப்பதிவு

குஜராத் மாநில பாஜக தலைவர் மற்றும் அமைச்சரை தரக்குறைவாகப் பேசியதற்காக ஆம் ஆத்மி தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image

கோபால் இத்தாலியா

Updated On :3 செப்டம்பர் 2022, 4:44 pm IST

குஜராத் மாநில பாஜக தலைவர் மற்றும் அமைச்சரை தரக்குறைவாகப் பேசியதற்காக ஆம் ஆத்மி தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் கோபால் இத்தாலியா அம்மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் மற்றும் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவியாவை தரக்குறைவாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து பாஜக நிர்வாகி ஒருவர் அளித்த புகாரில், பேரணியில் பாஜக தலைவர் சிஆர் பாட்டீலை ‘முன்னாள் கொள்ளைக்காரன்’ என்றும் அமைச்சரை ‘போதைப்பொருள் சங்கவி’ என கோபால் இத்தாலியா பேசினார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கோபால் மீது  பிரிவு 469, 500(அவதூறு செய்ததற்கான தண்டனை) 504, 505(1)பி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் துவங்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.