நாட்டில் புதிதாக 5,910 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 16 பேர் பலி

நாட்டில் ஒரேநாளில் புதிதாக 5,910 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 32 பேர் பலியாகியுள்ளனர். 
நாட்டில் புதிதாக 5,910 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 16 பேர் பலி
Published on
Updated on
1 min read

புது தில்லி: நாட்டில் ஒரேநாளில் புதிதாக 5,910 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 32 பேர் பலியாகியுள்ளனர். 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,910 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,44,62,445 ஆக உள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 53,974 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.12 சதவீதமாக உள்ளது. 

மேலும், 16 பேர் கரோனாவுக்கு உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு 5,28,007 ஆக உள்ளது. இறந்தோரின் விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது.

கரோனாவிலிருந்து மேலும் 7,034 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,38,80,464 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். குணமடைந்தோர் விகிதம் 98.69 சதவீதமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை 2,13,52,74,945(213 கோடி) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.  ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் மட்டும் 32,31,895 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com