லக்னௌ: ஐக்கிய ஜனதா தள தலைவரும் பிகார் முதல்வருமான நிதீஷ் குமாரும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் நேற்று சந்தித்த நிலையில், கட்சி அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் + பிகார் = மோடி அரசு வெளியேற்றம் என்று சமாஜ்வாதி கட்சியினர் அச்சடித்த போஸ்டரில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ராணி எலிசபெத்துக்காக காத்திருந்த மன்னரின் உடல்
உத்தரப்பிரதேசத்துக்கு 80 மக்களவைத் தொகுதிகளும், பிகாருக்கு 40 தொகுதிகளும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 120 மக்களவைத் தொகுதிகள் இருப்பதால், மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால், இவ்விரு மாநிலங்களில் மக்களிடையே அதிக வரவேற்பு பெரும் கட்சிக்கு அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனை வெளிப்படுத்தும் வகையில்தான் சமாஜ்வாதி கட்சி சார்பில் இப்படி ஒரு போஸ்டர் அடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.