விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தெலங்கானா தீ விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு!

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் அருகே மின்சார பைக் விற்பனையகத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு பிரதமர் மோடி, தெலங்கானா அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

News image
தெலங்கானாவில் மின்சார பைக் விற்பனையகத்தில் தீ விபத்து: 7 பேர் பலி
Updated On :13 செப்டம்பர் 2022, 6:10 am

DIN

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் அருகே மின்சார பைக் விற்பனையகத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு பிரதமர் மோடி, தெலங்கானா அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

பல்வேறு வணிக நிறுவனங்கள் இயங்கி வந்த பல அடுக்குமாடிக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், தீ விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ் ஆகியோர் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் நிவாரணத் தொகையை அறிவித்தனர்.

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.

உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியின் கீழ் உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று ட்வீட் செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள தெலங்கானா தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கே.டி.ராமராவ், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.