விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நடைப்பயணத்தின் 8-வது நாளில் ராகுல் காந்தி!

பாரத் ஜோடோ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் 8வது நாளை, கேரள மாநிலம் நவைக்குளத்திலிருந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று காலை தொடங்கினார்.

News image
Updated On :14 செப்டம்பர் 2022, 2:33 am

DIN


பாரத் ஜோடோ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் 8வது நாளை, கேரள மாநிலம் நவைக்குளத்திலிருந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று காலை தொடங்கினார்.

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ நடைப்பயணத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி நடைப்பயணத்தை முன்னின்று நடத்தி, செல்லும் இடங்களில் மக்களைச் சந்தித்து வருகிறாா். தமிழகத்தில் நிறைவடைந்த நடைப்பயணம், தற்போது கேரளத்தில் நடைபெற்று வருகிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் நவைக்குளம் சந்திப்பிலிருந்து புதன்கிழமை காலை ராகுல் காந்தி நடைப்பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். இந்த நடைப்பயணம் 11 மணியளவில் சாத்தனூர் பகுதியில் நிறுத்தப்பட்டு, ஓய்வுக்குப் பிறகு மாலை 4.30 மணிக்கு மீண்டும் சாத்தனூரிலிருந்து தொடங்கி இரவு 7.30 மணியளவில் பள்ளிமுக்கு என்ற பகுதியில் இன்றைய பயணத்தை நிறுத்துகின்றனர்.

மொத்தம் 150 நாள்கள் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,600 கி.மீ. நடைப்பயணம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.