ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

கோவா காங். எம்எல்ஏக்கள் பாஜகவில் சேரக் காரணம்? - ஜெய்ராம் ரமேஷ் பதில்!

கோவா எம்எல்ஏக்கள் மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு பயந்துதான் பாஜகவில் இணைந்ததாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். 

News image
Updated On :15 செப்டம்பர் 2022, 3:29 pm IST

கோவா எம்எல்ஏக்கள் மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு பயந்துதான் பாஜகவில் இணைந்ததாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். 

கோவாவில் முன்னாள் முதல்வா் திகம்பா் காமத் உள்பட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 போ், ஆளும் பாஜகவில் புதன்கிழமை இணைந்தனா்.  கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் மற்றும் மாநில பாஜக தலைவா் சதானந்த் தனாவடே ஆகியோா் முன்னிலையில் 8 எம்எல்ஏக்களும் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனா். 

இதனால் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு, அந்த மாநிலத்தில் வெறும் 3 எம்எல்ஏக்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றனா். 

இந்நிலையில் கேரளத்தில் செய்தியாளர்களிடம் இதுகுறித்துப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், 'காங்கிரஸை விட்டு இரண்டு வகையானவர்கள் மட்டுமே வெளியேறுகிறார்கள் முதலாவது, கட்சியிடம் இருந்து அனைத்து சலுகைகளையும் பெற்றவர்கள். கட்சியால் பலனடைந்தவர்கள். உதாரணமாக குலாம் நபி ஆசாத். அவர் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தது முதல் கட்சியில் இருந்து அனைத்தையும் பெற்றார். மத்திய அமைச்சர், பொதுச் செயலாளர் என ஆதாயம் அடைந்தவர். 

இரண்டாவது, மத்திய புலனாய்வு அமைப்புகளால் பாதிக்கப்படுபவர்கள் பாஜகவில் சென்று சேருவார்கள். பாஜகவில் சேர்ந்தவுடன் அவர்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது. உதாரணமாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா. காங்கிரஸில் இருந்தபோது அவரைத் தொடர்ந்து பேசிவந்த பாஜகவினர் இன்று அவர் முதல்வரானதும் அமைதியாகிவிட்டனர். 

தற்போது கட்சியை விட்டு வெளியேறிய கோவா எம்எல்ஏக்களும் இந்த 2-வது வகையைச் சேர்ந்தவர்கள். இந்த 8 எம்எல்ஏக்களும் இந்த பாஜகவின் வாஷிங் மெஷினுக்குள் சென்றுள்ளனர். உள்ளே சென்றதால் சுத்தமாகிவிடுவார்கள். ஆனால், அவர்கள் ஊழல்வாதிகள்' என்று பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.