குஜராத்தின் சூரத் நகரில் கட்டுமானத்தில் உள்ள கட்டடத்தின் 14வது மாடியிலிருந்து தவறி விழுந்து 2 தொழிலாளர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நகரின் பண்டேசரா பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டுமானத்தில் லிஃப்டில் பணிபுரியும் போது தொழிலாளர்கள் கீழே விழுந்ததாக காவல்துறை துணை ஆணையர் சாகர் பாக்மர் தெரிவித்தார்.
பல்லாடியம் ரெசிடென்சியின் 14வது தளத்தில் லிஃப்ட் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் தொழிலாளி ஒருவர் ஸ்டூலில் நின்று துளையிட்டுக் கொண்டிருந்தார்.திடீரென ஸ்டூல் நகர்ந்ததால், இருவரும் சமநிலை இழந்து தவறி கீழே விழுந்து இறந்தனர்.
முதற்கட்ட விசாரணையின்படி, தொழிலாளர்கள் பாதுகாப்பு பெல்ட் எதுவும் அணியவில்லை என்பது தெரிய வந்தது. மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
முன்னதாக புதன்கிழமை, அகமதாபாத்தில் கட்டுமானத்தில் உள்ள கட்டடத்தின் லிஃப்ட் அறுந்து விழுந்ததால் ஏழு தொழிலாளர்கள் பலியாகினர். ஒருவர் பலத்த காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பட்ஜெட் 2026! பள்ளிகளில் இனி 2 நாள்கள் இல்லை; நாள்தோறும் பி.டி. வகுப்பு!

தமிழ்நாடு பட்ஜெட் 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட்- நேரலை
தமிழ்நாடு பட்ஜெட் 2026: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!
சண்டை காவிரி நீருக்கா? த்ரிஷா அண்ணிக்கா? - அதிமுக கேள்வி
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



