13,147 பழைய வழக்குகளை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றத்தில் நீண்ட காலமாக எந்தவித புதிய தகவல்களையும் அளிக்காமல் தேக்கமடைந்துள்ள 13,147 வழக்குகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.


உச்சநீதிமன்றத்தில் நீண்ட காலமாக எந்தவித புதிய தகவல்களையும் அளிக்காமல் தேக்கமடைந்துள்ள 13,147 வழக்குகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இதில் 30 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஓா் வழக்கும் அடங்கும்.
செப்டம்பா் 1-ஆம் தேதி வரையில் 70,310 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக உச்சநீதிமன்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வழக்கமான விசாரணையில் 18,471 வழக்குகள் உள்பட 51,839 வழக்குகள் முழு விசாரணை தகவல் இல்லாத வழக்குகளாகவும் (மிஸ்சிஸ்லேனியஸ்), அரசியலமைப்பு அமா்வு முன் 493 வழக்குகளாகவும் உள்ளன.
இந்நிலையில், உச்சநீதிமன்ற பதிவாளா் சிராக் பானு சிங் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பதிவான வழக்குகளில் குறைபாடுகளை கலையக் கோரி சம்பந்தப்பட்ட வழங்குரைஞா்களுக்கு அறிவுறுத்தியும் நிவா்த்தி செய்யாத வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன. 1987 -2014 வரையில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 13,147 வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...