குனோ தேசிய பூங்காவில் நமீபியா சிறுத்தைகளை திறந்துவிட்டார் மோடி! படங்கள்...

நமீபியாவில் இருந்து இந்தியா வந்த சிறுத்தைகளை குனோ தேசிய பூங்காவில் சனிக்கிழமை திறந்துவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. 
மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவின் சிறப்பு அடைப்புக்குள் சிறுத்தைகளை விடுவித்த பிரதமர் நரேந்திர மோடி.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவின் சிறப்பு அடைப்புக்குள் சிறுத்தைகளை விடுவித்த பிரதமர் நரேந்திர மோடி.

ம.பி:  நமீபியாவில் இருந்து இந்தியா வந்த சிறுத்தைகளை குனோ தேசிய பூங்காவில் சனிக்கிழமை திறந்துவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. 

நாட்டில் சிறுத்தைகள் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட ஏழு தசாப்தங்களுக்குப் பிறகு, இந்தியாவில் சிறுத்தைகள் மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, தென்மேற்கு ஆப்பிரிக்காவின் நமீபியாவில் இருந்து 'திட்ட சீட்டா' மற்றும் நாட்டின் வனவிலங்குகள் மற்றும் வாழ்விடங்களை புத்துயிர் மற்றும் பன்முகப்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக 5 பெண், 3 ஆண் சீட்டாக்கள் என 8 சிறுத்தைகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டது.  

இந்த சிறுத்தைகளை பிரதமர் நரேந்தி மோடி தனது பிறந்தநாளையொட்டி, குனோ தேசிய பூங்காவில் விடுவிப்பதற்காக சனிக்கிழமை காலை மத்தியப்பிரதேசம் வருகை தந்தார். 

பின்னர், குனோ தேசிய பூங்காவில் 3 சிறுத்தைகளை விடுவித்தார். ஃபெடோரா தொப்பியை அணிந்துகொண்டு, கேமரா மூலம் அவைகளை புகைப்படமும் எடுத்தார் மோடி. பின்னர் அடைப்பு எண் ஒன்றில் இருந்து இரண்டு சிறுத்தைகளையும், அடைப்பு எண் இரண்டில் இருந்து மற்றொரு சிறுத்தையையும் விடுவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச ஆளுநர் மங்குபாய் படேல், முதல்வர்ர் சிவராஜ் சிங் சௌஹான், மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பேந்தர் யாதவ், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, அஸ்வினி சௌபே ஆகியோர் கலந்து கொண்டனர்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவின் சிறப்பு அடைப்புக்குள் சிறுத்தைகளை விடுவித்த பிறகு, அதிகாரிகளிடம் பேசும் பிரதமர் நரேந்திர மோடி.

குனோ தேசிய பூங்காவின் சிறப்பு அடைப்புக்குள் விடுவித்த சிறுத்தைகள்.

குனோ தேசிய பூங்காவில் திறந்துவிடப்பட்ட மற்றொறு சிறுத்தை

மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவின் சிறப்பு அடைப்புக்குள் சிறுத்தைகளை விடுவித்த பிறகு, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானுடன் பார்த்துக் கொண்டே புகைப்படம் எடுத்தார் மோடி.

குனோ தேசிய பூங்காவை பார்க்கும் சிறுத்தை 

கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுத்தையை புகைப்படம் எடுத்த மோடி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com