சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சோனியா காந்தி இல்லத்தில் குவியும் காங்கிரஸ் தலைவர்கள்!

தில்லியிலுள்ள சோனியா காந்தி இல்லத்திற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வருகை புரிந்துள்ளார். 

News image
பிரியங்கா காந்தி (கோப்புப் படம்)
Updated On :26 செப்டம்பர் 2022, 2:52 pm

DIN

தில்லியிலுள்ள சோனியா காந்தி இல்லத்திற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வருகை புரிந்துள்ளார். 

ஏற்கெனவே அஜய் மேகன், மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால், கமல்நாத் உள்ளிட்ட பலர் சோனியா காந்தி இல்லத்தில் குவிந்துள்ளனர். 

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டியிடுவது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், ராஜஸ்தான் முதல்வர் பதவியிலிருந்து அவர் விலகுவார் எனக் கூறப்படுகிறது. இதனால் துணை முதல்வரான சச்சின் பைலட் முதல்வர் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கு அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சச்சின் பைலட் முதல்வரானால் தங்கள் பதவியை ராஜிநாமா செய்வோம் என ராஜஸ்தானின் 92 எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், தலைமைப் பொறுப்பு மற்றும் ராஜஸ்தான் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தில்லியிலுள்ள சோனியா காந்தி இல்லத்தில் குவிந்துள்ளனர்.     

அந்தவகையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் சோனியா காந்தி இல்லத்திற்கு வருகை புரிந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.