தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அளவில்லா மகிழ்ச்சி: 57 ஆண்டுகளுக்குப் பின்.. முதல் முறையாகக் கிடைத்த சிலிண்டர்

அருணாசலப் பிரதேச மாநிலத்தின் விஜயநகர் என்ற கிராமத்துக்கு தற்போதுதான் முதல் முறையாக எரிவாயு உருளை விநியோகம் நடைபெற்றுள்ளது.

News image

அளவில்லா மகிழ்ச்சி: 57 ஆண்டுகளுக்குப் பின்.. முதல் முறையாகக் கிடைத்த சிலிண்டர்

Updated On :27 செப்டம்பர் 2022, 9:12 am


குவகாத்தி: நாட்டில் முதல் இண்டேன் எல்பிஜி எரிவாயு சிலிண்டர் விநியோகம் தொடங்கி சுமார் 57 ஆண்டுகளுக்குப் பின் அருணாசலப் பிரதேச மாநிலத்தின் விஜயநகர் என்ற கிராமத்துக்கு தற்போதுதான் முதல் முறையாக எரிவாயு உருளை விநியோகம் நடைபெற்றுள்ளது.

நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கும் விஜயநகரம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மியான்மர் எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்த கிராமத்தை அடைய 157 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பயணிக்க வேண்டும்.

இப்பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன்புதான்  சங்லாங் மாவட்டம் மியோ துணை மண்டலத்திலிருந்து 15 குடும்பங்களுக்கு எரிவாயு உருளைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதனை திருவிழாவாகக் கொண்டாடியுள்ளனர் உள்ளூர் மக்கள். 

இந்த ஊர்மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இன்று நிறைவேறியிருப்பதாக அமைச்சர் கம்லங் மோசாங் தெரிவித்துள்ளார். இதுநாள் வரை அவர்கள் விறகுகளை வைத்து அடுப்பில்தான் சமைத்து வந்தனர். இதனால், மழைக்காலங்களில் பெண்கள் படும் துயரத்துக்கு அளவே இல்லாமல் இருந்தது. இதனால், மக்களின் கண்ணீர் துடைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதி மக்கள் பலருக்கும் உரிய ஆவணங்கள் இல்லாததால், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் எரிவாயு உருளைக்காக பதிவு செய்து காத்திருக்கிறார்கள். அவர்களது ஆவணங்கள் உரிய அதிகாரிகளைச் சென்றடையவே பல நாள்கள் ஆகும். ஒரு வங்கிப் பணப்பரிமாற்றத்துக்குக் கூட இங்கு பல நாள்கள் காத்திருக்க வேண்டியது உள்ளது என்கிறார் கேஸ் ஏஜென்ஸி நிர்வாகி அந்து.

2020ஆம் ஆண்டு இக்கிராமத்துக்கு பிஎஸ்என்எல் வசதி வந்தாலும், ஒருவர் தொலைபேசியில் அழைக்கவோ, அழைப்பை எடுக்கவோ நிச்சயம் அதிர்ஷ்டம் வேண்டும் என்கிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.