முன்கூட்டிய அறிவிப்பின்றி நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டம், உயா் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானது. வேலைநிறுத்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்ததில், 58 பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. ஒரு பயணியும் 10 ஊழியா்களும் வன்முறையால் காயமடைந்தனா். ஏற்கெனவே, நிதிச்சுமை உள்ள நிலையில் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதாலும், செப். 23-ஆம் தேதி குறைவான பேருந்துகள் இயக்கப்பட்டதன் காரணமாகவும் போக்குவரத்துக்குக் கழகத்துக்கு ரூ. 5 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. எனவே, பிஎஃப்ஐ அமைப்பு ரூ.5 கோடியை இழப்பீடாக வழங்க உத்தரவிடவேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.