அடுத்த 21 நாட்களுக்கு கர்நாடகத்தில் இந்த ஒற்றுமைப் பயணம் தொடரும். இந்தப் பயணத்தின் கர்நாடக மக்களின் குறைகள் கேட்கப்படும். அடுத்த 20-25 நாட்கள் நீங்கள் என்னுடன் பயணித்தால் கர்நாடக மக்களின் வலி உங்களுக்குத் தெரிய வரும். கர்நாடக மக்கள் ஊழல், வேலைவாய்ப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வு போன்ற அனைத்து பிரச்னைகளையும் சந்தித்து வருகின்றனர். இந்த நடைப்பயணம் இந்திய அரசியலமைப்பை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கொள்கைகளிடம் இருந்து காப்பதே ஆகும். அரசியலமைப்பு இல்லாமல் மூவர்ணக் கொடி மட்டும் இருப்பது அர்த்தமற்றது. மக்கள் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றால் அவதிப்பட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு எதிராக அராஜகங்கள் நடத்தப்படுகின்றன. அரசு நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த ஒற்றுமை யாத்திரை உரை நிகழ்த்துவதற்காக அல்ல, உங்களின் குறைகளை கேட்பதற்காக.” என்றார்.