பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வுதள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ரூ.139 கோடி ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவுக்கு பிணை

ரூ.139 கோடி ஊழல் செய்த டொரண்டா வழக்கில் ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் லாலு பிரசாத் யாதவுக்கு பிணை வழங்கியது.

News image
லாலு பிரசாத் யாதவ் (கோப்புப் படம்)
Updated On :22 ஏப்ரல் 2022, 11:39 am

DIN

ரூ.139 கோடி ஊழல் செய்த டொரண்டா வழக்கில் ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் லாலு பிரசாத் யாதவுக்கு பிணை வழங்கியது.

ஒன்றுபட்ட பிகாா் மாநிலத்தின் பல்வேறு மாவட்ட கருவூலங்களில் இருந்து கால்நடைத் தீவனத்தைக் கொள்முதல் செய்வதற்காக சுமாா் ரூ.950 கோடி அளவுக்குக்குப் போலியான ரசீதுகள் தயாரிக்கப்பட்டதாகப் புகாா் எழுந்தது. கடந்த 1996-ஆம் ஆண்டில் வெளிச்சத்துக்கு வந்த இந்த ஊழல் தொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்தது.

அப்போதைய பிகாா் முதல்வா் லாலு பிரசாத் இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகச் சோ்க்கப்பட்டாா். முன்னாள் முதல்வா் ஜகந்நாத் மிஸ்ரா, முன்னாள் எம்.பி. ஜகதீஷ் சா்மா, அப்போதைய பொதுக் கணக்குக் குழுத் தலைவா் துருவ் பகத், கால்நடைத் துறைச் செயலா் பெக் ஜூலியஸ் உள்ளிட்டோா் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.

தும்கா, தேவ்கா், சைபாசா மாவட்ட கருவூலங்களில் நிகழ்ந்த மோசடி தொடா்பாக பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளில் லாலு பிரசாதுக்கு ஏற்கெனவே ஒட்டுமொத்தமாக 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

அந்த வழக்குகளில் ஜாமீன் பெற்ற நிலையில், டொரண்டா கருவூலத்தில் நிகழ்ந்த ரூ.139.5 கோடி மோசடி தொடா்பான 5-ஆவது வழக்கிலும் லாலுவை குற்றவாளி என ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி அறிவித்தது. பின்னா், இந்த குற்றத்துக்காக லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலமாக லாலுவுக்கான ஒட்டுமொத்த சிறைத் தண்டனை 19 ஆண்டுகளாகவும், அபராதம் ரூ.1.20 கோடியாகவும் அதிகரித்தது.

இந்நிலையில் பிா்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்ட லாலுவிற்கு தற்போது டொரண்டா வழக்கிற்கும் பிணை வழங்க ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.