பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 28ஆம் தேதி அசாம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அசாம் மாநிலம் திபு பகுதியில் நடைபெறவுள்ள அமைதி, ஒற்றுமை, வளர்ச்சிப் பேரணியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நலத் திட்டங்களைத் தொடக்கி வைக்கிறார்.
பிற்பகல் 1.45 மணிக்கு திப்ருகரில் உள்ள அசாம் மருத்துவக்கல்லூரிக்கு செல்லும் பிரதமர், திப்ருகர் புற்றுநோய் மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டிற்காக தொடக்கி வைக்கவுள்ளார்.
பின்னர் பிற்பகல் 3 மணியளவில் திப்ருகரில் உள்ள கானிக்கர் திடலில் பொது நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்கவுள்ளார். அந்த நிகழ்ச்சியில் ஆறு புற்றுநோய் மருத்துவமனைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் அவர், ஏழு புதிய புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.