காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு மீண்டும் கரோனா நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது.
ஏற்கெனவே, கடந்த ஜூன் மாதத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட போது, அவரது மகளான பிரியங்கா காந்திக்கும் லேசான அறிகுறியுடன் கரோனா கண்டறியப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தன் டிவிட்டர் பக்கத்தில், “இன்று மீண்டும் கரோனா நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று விசாரணை
இரண்டு மாத இடைவெளியில் இரண்டாவது முறையாக கரோனா நோய்த் தொற்றுக்கு பிரியங்கா காந்தி பாதிக்கப்பட்டுள்ளார்.