12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

போலியான போலீஸ் ஸ்டேஷனைக் காட்டிக் கொடுத்த துப்பாக்கி

பிகார் மாநிலம் பங்கா பகுதியில் இயங்கிவந்த போலியான காவல்நிலையம் கண்டுபிடிக்கப்பட்டு 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலியான போலீஸ் ஸ்டேஷனைக் காட்டிக் கொடுத்த துப்பாக்கி

Published On :

பிகார் மாநிலம் பங்கா பகுதியில் இயங்கிவந்த போலியான காவல்நிலையம் கண்டுபிடிக்கப்பட்டு 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

சுமார் 8 மாதங்களாக இயங்கி வந்த இந்த போலியான காவல்நிலையம், நகர காவல்நிலையம் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் வீட்டுக்கு மிக அருகே இருந்ததும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் வழக்கமாக காவலர்கள் அணியும் சீருடை அணிந்திருந்ததும், உதவி ஆய்வாளர்கள் மற்றும் டிஎஸ்பி சீருடைகளையும் பயன்படுத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், நகர காவல் நிலையத்துக்கு அருகே காவல்துறை சீருடையில், அரசு வழங்கும் துப்பாக்கியில்லாமல், நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்ததைக் கவனித்தார்.

உடனடியாக அவர்களை அழைத்து விசாரித்தபோதுதான், போலி காவலர்கள் என்பதும், அவர்கள் 8 மாதங்களக போலி காவல்நிலையம் நடத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது.

விருந்தினர் மாளிகை ஒன்றில், மிகக் கச்சிதமாக காவல்நிலையத்தை வடிவமைத்திருப்பதும், சாதாரண எளிய மக்கள் இதன் வேறுபாட்டைக் கண்டறிவது கடினம் என்றும் விசாரித்து வரும் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.