குஜராத் மாநிலம் பாட்டியாலாவில் பிச்சை எடுப்பதற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், பிச்சை எடுக்க வேண்டாம் என்ற பதாகையுடன் சிறுமி போராட்டத்தில் பங்கேற்ற புகைப்படம் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
குஜராத் மாநிலம் பாட்டியாலாவில் பிச்சை எடுப்பதை ஊக்குவிக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தியும், சுயதொழில் செய்ய வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இதில் விழிப்புணர்வு பதாகைகளுடன் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். வெள்ளை உடை அணிந்து போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் பிச்சை எடுக்க வேண்டாம் என்பதையும், அதனை ஊக்குவிக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தினர்.
இதில், பிச்சை எடுக்க வேண்டாம் என்ற பதாகையுடன் சிறுமி போராட்டத்தில் பங்கேற்ற புகைப்படம் பலரால் பகிரப்பட்டு வருகிறது.