மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

பாஜக வளர்ச்சியால் சந்திரசேகர் ராவுக்கு கவலை: ஜெ.பி.நட்டா

தெலங்கானா மாநிலத்தின் பல பகுதிகளில் பாஜக வளர்ச்சியடைந்திருப்பது முதல்வர் சந்திரசேகர் ராவை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா விமர்சித்துள்ளார். 

News image
ஜெ.பி.நட்டா (கோப்புப் படம்)
Updated On :1 பிப்ரவரி 2024, 10:08 am

DIN


தெலங்கானா மாநிலத்தின் பல பகுதிகளில் பாஜக வளர்ச்சியடைந்திருப்பது முதல்வர் சந்திரசேகர் ராவை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா விமர்சித்துள்ளார். 

தெலங்கானாவில் கோஷாமால் தொகுதியின் பாஜக எம்எல்ஏவான ராஜா சிங், இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களைப் பேசியதாக விடியோ ஒன்றை பதிவிட்டார். 

இந்த விடியோவில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய நூபுர் சர்மாவின் கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனை. இதனைத் தொடர்ந்து ராஜா சிங்கை காவல் துறையினர் கைது செய்தனர். 

காவல் துறையின் நடவடிக்கையைக் கண்டித்து மாநில தலைவர் பண்டி சஞ்சய் குமார் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

காவல் துறையினரின் அனுமதியை மீறி நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக மாநில தலைவர் சஞ்சய் குமார் கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, சட்டவிரோதமாக பாஜக மாநிலத் தலைவர் சஞ்சய் குமாரை தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி அரசு கைது செய்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சந்திரசேகர் ராவின் ஊழல் ஆட்சிக்கு எதிராகவும், குடும்ப அரசியலுக்கு எதிராகவும் தெலங்கானா மக்கள் கிளர்ந்துள்ளனர். இதனால், பாஜகவுக்கு தெலங்கானாவின் மூலைமுடுக்குகளில் கூட ஆதரவு கிடைத்து வருகிறது. இதனால் சந்திரசேகர் ராவ் கவலை அடைந்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.