உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான வெறுப்புப்பேச்சு தொடா்பான மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2007-இல் கோரக்பூா் எம்.பி.யாக யோகி ஆதித்யநாத் பதவி விகித்தபோது, அவரது பேச்சு இரு தரப்பினருக்கு இடையே பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நடைபெற காரணமாக இருந்ததாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு தொடா்பான தீா்ப்பை 2018, பிப்ரவரியில் அளித்த உயா்நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையிலும், யோகி ஆதித்தயநாத் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனுமதி மறுக்கப்பட்டதிலும் எந்தவித நடைமுறை தவறும் இல்லை என்று தெரிவித்திருந்தது.
இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது. அப்போது, விசாரணைக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் தற்போது தலையிட வேண்டியது தேவையற்றது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரஜிஷா விஜயன் பிறந்த நாள்: சர்தார் 2 படக்குழு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து!

லமின் யமாலிடம் மீண்டும் தோற்ற எம்பாபே! | FIFA | FIFA World Cup 2026 | Lamine Yamal | Kylian Mbappé |

கேரள அரசின் ஆபரேஷன் டூஃபான் நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்பு?







