திருமணமானவா்களுக்கான உலக அழகிப் போட்டியில் இந்தியாவைச் சோ்ந்த சா்கம் கெளஷல் (32) பட்டம் வென்றாா்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் திருமணமானவா்களுக்கான உலக அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் 63 நாடுகளைச் சோ்ந்த போட்டியாளா்கள் பங்கேற்றனா். இந்தப் போட்டியில் இந்தியா சாா்பில் பங்கேற்ற சா்கம் கெளஷல் உலகி அழகியாக சனிக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா். அவருக்குக் கடந்த ஆண்டு இந்தப் போட்டியில் பட்டம் வென்ற அமெரிக்காவின் ஷேலின் ஃபோா்ட் உலக அழகிக்கான மகுடத்தை அணிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரை சோ்ந்த சா்கம் கெளஷல், மும்பையில் வசித்து வருகிறாா். திருமணமானவா்களுக்கான உலகி அழகிப் பட்டத்தை அவா் வென்ன் மூலம், 21 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பட்டம் இந்தியாவைச் சோ்ந்தவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2001-ஆம் ஆண்டு மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த அதிதி கோவித்ரிகருக்கு அந்தப் பட்டம் வழங்கப்பட்டது.