12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

கருத்தரிக்க....இந்த டயட் முறையைப் பின்பற்றுங்கள்!

கருத்தரிக்க முடியாதவர்கள் மெடிட்டரேனியன் டயட் முறையை மேற்கொள்ளலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Published On :

கருத்தரிக்க முடியாதவர்கள் மெடிட்டரேனியன் டயட் முறையை மேற்கொள்ளலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மெடிட்டரேனியன் டயட்.. உணவு உட்கொள்ளுதலில் இன்று பலவகையான முறைகளும் அதற்கு பெயர்களும் வந்துவிட்டன. மாறிவரும் உலகத்தில் உணவு முறைகளிலும் வெகுவான மாற்றங்கள் ஏற்பாட்டுக் கொண்டிருக்கின்றன. இதனாலே நோய்களும் அதிகரித்துக் காணப்படுகின்றன.

அந்த வகையில் உடல்நலன் கருதி இன்று டயட் முறைகளும் வெகுவாகப் பேசப்படுகின்றன. உடல் எடையைக் குறைக்க, கூட்டுவதற்கு, உடல்நிலையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு என்று டயட் முறைகள் வகுக்கப்படுகின்றன. 

அதில் ஒன்றுதான் மெடிட்டரேனியன் டயட். காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், பீன்ஸ், தானியங்கள், நட்ஸ் வகைகள், மீன், இறைச்சி, பன்னீர் உள்ளிட்ட சில பால் பொருள்கள் உள்ளிட்டவை சேர்ந்ததே இந்த மெடிட்டரேனியன் டயட். 

Story image

மெடிட்டரேனியன் டயட் மேற்கொள்பவர்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள், பக்கவாதம் உள்ளிட்டவை ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. 

இந்த புரோட்டீன், இரும்புச்சத்து உள்ளிட்ட சத்துகள் அதிகமிருப்பதால் உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைத்து ஆரோக்கியமாக வைக்கின்றன. இதனால் உடலில் உள்ள பிரச்னைகள் குறைகிறது. 

இந்நிலையில், மெடிட்டரேனியன் டயட் மேற்கொள்பவர்களுக்கு கருத்தரித்தல் எளிதாக நடைபெறும் என்றும் கருத்தரிக்க முடியாதவர்கள் மெடிட்டரேனியன் டயட் முறையை மேற்கொள்ளலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு சாப்பிடுவது கருவுறுத்தலுக்கான சிகிச்சைகளிலும் உதவும் என்று தெரிவிக்கின்றனர்.

மோனாஷ் பல்கலைக்கழகம், சன்ஷைன் கோஸ்ட் பல்கலைக்கழகம் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் இந்த டயட் உணவுகள் ஆணின் விந்தணுக்களின் தரம், கருவுறுதல் மற்றும் செயற்கை கருத்தரித்தலுக்கு உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. 

கருவுறாமை என்பது தற்போது உலகளாவிய பிரச்னையாக மாறியுள்ள இந்த சூழ்நிலையில் இந்த ஆய்வு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.