கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரத்தின் எதிரொலியாக அடுத்த மூன்று நாள்களுக்கு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் குந்தாப்பூர் அரசு பி.யூ. கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இஸ்லாமிய மாணவிகளுக்கு தடை விதித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
கர்நாடகத்தின் பல்வேறு கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் இஸ்லாமிய மாணவிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதனை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
இந்நிலையில், ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து ஹிந்து மாணவர்களும், அதற்கு ஆதரவு தெரிவுத்து மற்றொரு தரப்பு மாணவர்களும் ஷிவ்மொக்கா, பாகல்கோட் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பதற்றமான சூழலைத் தவிர்க்கும் வகையில், ஒரு சில பகுதிகளில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.
ஹிஜாப் விவகாரத்தில் கல்வி நிலையங்களில் பதற்றமான சூழல் நிலவுவதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.
ஹிஜாப் அணிந்ததால் தனியறை...
பல்வேறு போராட்டத்திற்கு பிறகும், மாணவிகளின் தொடர் கோரிக்கைக்குப் பிறகும், குந்தாப்பூர் அரசு பி.யூ. கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வரும் முஸ்லிம் மாணவிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், அவர்கள் கல்லூரியில் தனியறையில் அமரவைக்கப்பட்டனர். அவர்களுக்கு வகுப்புகள் எதுவும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஷாலின் மகுடம் படப்பிடிப்பு நிறைவு!

நாள்தோறும் 10 நிமிடங்கள் யோகா செய்யுங்கள்: தர்மேந்திர பிரதான் அழைப்பு

சர்வதேச யோகா தினம் - புகைப்படங்கள்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 3 கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




