தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

'ஹிஜாப் சீருடை அல்ல': பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

ஹிஜாப் பள்ளியின் சீருடை அல்ல, அதனால் ஹிஜாப் அணிந்து வருவதைத் தடை செய்ய வேண்டும் என்று மத்தியப் பிரதேச மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இந்தேர் சிங் பர்மார் தெரிவித்துள்ளார்.

கோப்புப் படம்

Published On :1 பிப்ரவரி 2024, 1:51 pm IST


ஹிஜாப் பள்ளியின் சீருடை அல்ல, அதனால் ஹிஜாப் அணிந்து வருவதைத் தடை செய்ய வேண்டும் என்று மத்தியப் பிரதேச மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இந்தேர் சிங் பர்மார் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் குந்தாப்பூர் அரசு பி.யூ. கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இஸ்லாமிய மாணவிகளுக்கு தடை விதித்த விவகாரம் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

தற்போது அந்த கல்லூரியில் இஸ்லாமியப் பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவது குறித்து மத்தியப் பிரதேச மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய அவர், ஹிஜாப் பள்ளி சீருடை அல்ல. அதனால் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வருவதைத் தடை செய்ய வேண்டும். இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாரம்பரியம் என்றால் அதனை வீட்டில் பின்பற்ற வேண்டும். சீருடை விவகாரத்தில் துறை ரீதியாக பரிசீலனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 

மாணவர்களின் ஒழுக்கத்திற்காகவே பள்ளிகளில் சீருடை கடைபிடிக்கப்படுகிறது. அடுத்த கல்வியாண்டு முதல் பின்பற்றும் வகையில், பள்ளி சீருடை தொடர்பாக விரைவில், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று கூறினார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.