மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சர்வதேச பயணிகள் விமான சேவை மறுஅறிவிப்பு வரும் வரை ரத்து

சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :28 பிப்ரவரி 2022, 6:58 am

DIN

சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை தடை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதியுடன் விமானங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. 

விமானப் போக்குவரத்துக்கான தடை இன்றுடன்(பிப்.28) முடிவடைய உள்ள நிலையில், அடுத்த அறிவிப்பு வரும் வரை சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை தொடரும் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதேநேரம், மத்திய அரசின் அனுமதியுடன் அங்கீகரிக்கப்பட்ட சில விமான சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.