தில்லியில் கரோனா பாதிப்புகள் அதிகமாக இருந்தாலும், பெரும்பாலானோருக்கு மருத்துவமனை உதவிகள் அவசியமில்லாத வகையில் லேசான தொற்று மட்டுமே ஏற்படுவதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
காணொலி வாயிலாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த கேஜரிவால் மேலும் கூறியது:
"தில்லியில் நோய்த் தொற்றுக்காக சிகிச்சைப் பெற்று வருபவர்கள் எண்ணிக்கை டிசம்பர் 29-ம் தேதி 2 ஆயிரம் ஆக இருந்த நிலையில், ஜனவரி 1-ம் தேதி அது 6 ஆயிரமாக அதிகரித்துள்ளது. ஆனால், இந்த காலகட்டத்தில் நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. டிசம்பர் 29 நிலவரப்படி 262 பேர் சிகிச்சைப் பெற்று வந்தனர். ஜனவரி 1 நிலவரப்படி 247 பேர் மட்டுமே சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கடந்தாண்டு மார்ச் 27-ம் தேதி தில்லியில் 6,600 பேர் நோய்த் தொற்றுக்காக சிகிச்சைப் பெற்று வந்தனர். 1,150 ஆக்ஸிஜன் படுக்கைகள் பயன்பாட்டில் இருந்தன.145 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வந்தனர். தற்போது 5 பேர் மட்டுமே வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி 6,360 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 3,100 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் லேசான தொற்றுதான் உள்ளது. அவர்களுள் பெரும்பாலானோருக்கு மருத்துவமனை உதவிகள் அவசியமில்லை" என்றார்.
நாட்டில் இதுவரை மொத்தம் 1,525 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், தில்லியில் மட்டும் 351 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு எதிரான போட்டி! குஜராத்துக்கு 156 ரன்கள் இலக்கு!

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


