கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இந்தியாவிடமிருந்து பிரமோஸ் ஏவுகணைகளை வாங்கும் பிலிப்பின்ஸ்

இந்தியாவிலிருந்து முதன்முறையாக பிரமோஸ் வகை ஏவுகணையை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் பிலிப்பின்ஸ் அரசுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News image
இந்தியாவிடமிருந்து பிரமோஸ் ஏவுகணையை வாங்கும் பிலிப்பின்ஸ்
Updated On :28 ஜனவரி 2022, 10:34 am

DIN

இந்தியாவிலிருந்து முதன்முறையாக பிரமோஸ் வகை ஏவுகணையை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் பிலிப்பின்ஸ் அரசுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியா-ரஷியா கூட்டுத்தயாரிப்பில் உருவாக்கப்படும் பிரமோஸ் வகை ஏவுகணை நாட்டின் பாதுகாப்புத் துறையில் முக்கியப் பங்காற்றி வருகிறது. கப்பல், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் நிலப்பரப்பிலிருந்து ஏவும் வகையில் தயாரிக்கப்படும் இந்த வகை ஏவுகணைகளை பிரமோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் எனும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

இந்நிலையில் நாட்டில் முதல்முறையாக இவ்வகை ஏவுகணைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. பிலிப்பின்ஸ் அரசுடன் 37.4 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த ஒப்பந்தமானது இருதரப்பு அதிகாரிகள் மத்தியில் வெள்ளிக்கிழமை கையெழுத்தானது.

கரையிலிருந்து செலுத்தப்பட்டு இலக்கைத் தாக்கி அழிக்கும் வகையிலான பிரமோஸ் ஏவுகணைகளின் ஏற்றுமதி எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. 

சீனாவுடன் எல்லைப் பிரச்னை நிலவி வரும் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக் உள்ளிட்ட பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஏற்கெனவே பிரமோஸ் வகை ஏவுகணைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.