

தமிழகத்தில் கரோனா 3வது அலையை வெல்ல மக்கள் ஒத்துழைப்பு அவசியம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய வகை கரோனாவைப் பற்றி தேவையற்ற பீதி வேண்டாம். தில்லி, மும்பையில் கரோனா பரவல் பெருமளவு குறைந்துள்ளது.
3வது அலையில் அதிக அளவு முதியோர்கள்தான் பாதிக்கப்பட்டு உயிரிழ்ந்தனர். அதனால் அவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்க வேண்டும்.
முதன்மைப் பணியாளர்கள் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.