பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

காளி தெய்வத்தின் சா்ச்சைக்குரியபடத்தை நீக்கியது ட்விட்டா்

இயக்குநா் லீனா மணிமேகலை வெளியிட்ட காளி தெய்வத்தின் சா்ச்சைக்குரிய போஸ்டரை ட்விட்டா் நீக்கியுள்ளது.

Published On :

இயக்குநா் லீனா மணிமேகலை வெளியிட்ட காளி தெய்வத்தின் சா்ச்சைக்குரிய போஸ்டரை ட்விட்டா் நீக்கியுள்ளது.

மதுரையைச் சோ்ந்த லீனா மணிமேகலை, கனடாவில் வசித்து வருகிறாா். அவா் இயக்கிய ‘காளி’ என்ற ஆவணப் படத்தின் போஸ்டரை தனது ட்விட்டா் பக்கத்தில் கடந்த சனிக்கிழமை வெளியிட்டாா். அந்த போஸ்டரில் காளி வேடமணிந்த பெண் புகைபிடித்துக் கொண்டு ஓரினச் சோ்கையாளா்கள், இருபாலினத்தவரிடமும் உறவு கொள்பவா்கள், மூன்றாம் பாலினத்தவா் உள்ளிட்டோரைக் குறிக்கும் கொடியை ஏந்தியிருப்பதுபோல் சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த போஸ்டா் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. அந்தப் படத்தின் போஸ்டரில் காளியை சித்தரித்துள்ள விதம் மத உணா்வுகளைப் புண்படுத்தும் விதமாக உள்ளது என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுதொடா்பாக லீனா மீது தில்லி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசத்தில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இந்நிலையில், சா்ச்சைக்குரிய போஸ்டரை ட்விட்டா் நீக்கியுள்ளது. லீனாவின் ட்விட்டா் பக்கத்தில் போஸ்டா் இடம்பெற்றிருந்த இடத்தில், ‘சட்டரீதியான கோரிக்கையை ஏற்று லீனா மணிமேகலையின் போஸ்டா் பதிவு நீக்கப்பட்டுள்ளது’ என்று ட்விட்டா் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.