கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

வெள்ளத்தில் காரோடு அடித்துச் செல்லப்பட்ட குடும்பம்: 9 பேர் பலி; சிறுமி மீட்பு

தேலா ஆற்றின் வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டதில், அதில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது  பேர் பலியாகினர். ஒரு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

News image
வெள்ளத்தில் காரோடு அடித்துச் செல்லப்பட்ட குடும்பம்: 9 பேர் பலி; சிறுமி மீட்பு
Updated On :8 ஜூலை 2022, 5:45 am

ANI

நைனிடால்:  உத்தரகண்ட் மாநிலம் ராம்நகர் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை, தேலா ஆற்றின் வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டதில், அதில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது  பேர் பலியாகினர். ஒரு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

இந்த கோர விபத்து இன்று அதிகாலை 5 மணியளவில் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரிலிருந்து இதுவரை 4 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கடுமையான வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், வெள்ளத்துக்குள் சிக்கியிருக்கும் காரிலிருந்து மற்ற உடல்களை மீட்க முடியாமல் மீட்புக் குழுவினர் தத்தளித்து வருகிறார்கள்.

இது குறித்து காவல்துறை உதவி ஆய்வாளர் கூறுகையில், தேலா ஆற்றில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரில் 9 பேர் பலியாகினர். ஒரு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டார். காரிலிருந்து 4 உடல்கள் மீட்கப்பட்டன. 5 பேரின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.