தெலங்கானா: தெலங்கானாவில் முதல்முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து நாட்டில் முதல்முறையாக கேரளத்தில் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் குவைத் நாட்டிலிருந்து தெலங்கானா வந்த 40 வயது நபருக்கு குரங்கு அம்மை அறிகுறி உறுதி செய்யப்பட்டது.
இதனிடையில் குரங்கு அம்மை அறிகுறியுடன் உள்ள நபர் ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.