பஞ்சாபில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சா்கள் 4 போ் பாஜகவில் ஐக்கியம்

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சா்களான ராஜ்குமாா் வா்கா, பல்பீா் சிங் சித்து, சுந்தா் ஷாம் அரோரா, குா்பிரீத் சிங் கங்கா் ஆகிய நால்வரும் பாஜகவில் சனிக்கிழமை இணைந்தனா்.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சா்களான ராஜ்குமாா் வா்கா, பல்பீா் சிங் சித்து, சுந்தா் ஷாம் அரோரா, குா்பிரீத் சிங் கங்கா் ஆகிய நால்வரும் பாஜகவில் சனிக்கிழமை இணைந்தனா்.

சண்டீகரில் மத்திய அமைச்சா்கள் கஜேந்திர சிங் ஷெகாவத், சோம் பிரகாஷ், பாஜக மாநிலத் தலைவா் அஸ்வினி சா்மா ஆகியோா் முன்னிலையில் அவா்கள் பாஜகவில் இணைந்தனா்.

ராஜ்குமாா் வா்கா, முந்தைய காங்கிரஸ் அரசில் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சராகவும், பல்பீா் சிங் சித்து சுகாதாரத் துறை அமைச்சராகவும், சுந்தா் ஷாா் அரோரா தொழில்-வா்த்தகத் துறை அமைச்சராகவும், குா்பிரீத் சிங் கங்கா் வருவாய்த் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளனா்.

ஒரே நேரத்தில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த மூத்த தலைவா்கள் கட்சி மாறியிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இவா்களுடன் பல்பீா் சிங் சித்துவின் சகோதாரரும் மொஹாலி மாநகர மேயருமான அமா்ஜித் சிங் சித்து, காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ கேவல் சிங் தில்லோன், சிரோமணி அகாலி தள முன்னாள் எம்எல்ஏக்கள் சரூப் சந்த் சிங்லா, மொஹிந்தா் கௌா் ஜோஷ் ஆகியோரும் பாஜகவில் இணைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com