கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மாநிலங்களவைத் தேர்தல்: ராஜஸ்தானில் 3 இடங்களை வென்றது காங்கிரஸ்

ராஜஸ்தானில் காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 3 பேரும் வெற்றி பெற்றுள்ளதாக அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :10 ஜூன் 2022, 3:58 pm

DIN


ராஜஸ்தானில் காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 3 பேரும் வெற்றி பெற்றுள்ளதாக அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் அனைத்து 200 எம்எல்ஏ-க்களும் வாக்களித்தனர். அவையில் காங்கிரஸுக்கு 108 எம்எல்ஏ-க்கள், பாஜகவுக்கு 71, சுயேச்சைகள் 13, ராஷ்ட்ரீய லோகந்திரிக் கட்சிக்கு 2 மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பாரதிய பழங்குடியின கட்சிக்குத் தலா இரண்டு எம்எல்ஏ-க்கள் உள்ளனர். 

இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரண்தீப் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக் மற்றும் பிரமோத் திவாரி ஆகியோர் வெற்றி பெற்றுவிட்டதாக அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

இதுபற்றி ட்விட்டர் பக்கத்தில் அசோக் கெலாட் பதிவிட்டுள்ளதாவது:

"ராஜஸ்தானில் காங்கிரஸ் மூன்று மாநிலங்களவை இடங்களை வென்றிருப்பது ஜனநாயகத்தின் வெற்றி. புதிதாகத் தேர்வாகியுள்ள மூன்று எம்.பி.க்கள் பிரமோத் திவாரி, முகுல் வாஸ்னிக் மற்றும் ரண்தீப் சுர்ஜேவாலா ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்."

பாஜக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கன்ஷியாம் திவாரி 4-வது இடத்தைக் கைப்பற்றியுள்ளார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "என்னை வேட்பாளராக்கியதற்கு மாநில மற்றும் மத்திய தலைமைக்கு நன்றியுடன் இருப்பேன். நான் 43 வாக்குகளைப் பெற்றுள்ளேன்" என்றார்.

மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியாகும் முன் இந்தக் கருத்துகள் வெளிவந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.