உக்ரைனில் படித்து வரும் இந்தியாவை சேர்ந்த ஒரு மாணவர் உடல்நலக் குறைவால் புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.
ரஷிய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து 7-வது நாளாக ரஷியாவின் முப்படைகளும் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
நேற்று காலை முதல் தீவிர தாக்குதலை நடத்தி ரஷியப் படைகள் முன்னேறி வருகிறது. குறிப்பாக, காவல்துறை அலுவலகங்கள், தொலைத் தொடர்பு கோபுரங்கள், பாதுகாப்பு அமைச்சக கட்டடங்கள் என அரசின் கட்டடங்களை ஏவுகணை மூலம் தாக்கி வருகின்றனர்.
இதையும் படிக்க | உக்ரைன்: கார்கிவிலிருந்து உடனடியாக இந்தியர்கள் வெளியேற உத்தரவு
இந்நிலையில், பஞ்சாபை சேர்ந்த சந்தல் ஜிண்டால்(வயது 22) என்ற மருத்துவ மாணவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு வின்னிட்சியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
நேற்று ரஷிய தாக்குதலில் கர்நாடகத்தை சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.