வங்கக் கடலில் 'அசானி' புயல்
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியிருந்த காற்றழுத்தமானது புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியிருந்த காற்றழுத்தமானது புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதற்கு அசானி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதுபற்றி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
"ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து 970 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள அசானி புயல் மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகரும். அடுத்த 24 மணி நேரத்தில் இது தீவிரப் புயலாக உருமாறி வடமேற்கு திசையில் நகரக்கூடும்.
வடக்கு ஆந்திரம் மற்றும் ஒடிஸா கடற்கரைப் பகுதிகளில் மே 10-ம் தேதி புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது."
கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் கரைக்குத் திரும்புமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...