தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பொறுப்பேற்பு

​இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக நிதித் துறை முன்னாள் செயலர் ராஜீவ் குமார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டார்.

News image
Updated On :15 மே 2022, 9:37 am


இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக நிதித் துறை முன்னாள் செயலர் ராஜீவ் குமார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷீல் சந்திரா சனிக்கிழமை மாலை ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ராஜீவ் குமார் இன்று பதவியேற்றுக்கொண்டுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுவதற்கு முன்பு கடந்த செப்டம்பர் 1, 2020 முதல் தேர்தல் ஆணையராகப் பதவி வகித்து வந்தார்.

ராஜீவ் குமார் பணிக் காலத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல், குடியரசு துணைத் தலைவர் தேர்தல், 2024 மக்களவைத் தேர்தல் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. 

ஆந்திரம், அருணாசல பிரதேசம், சத்தீஸ்கர், ஹரியாணா, ஹிமாசல பிரதேசம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களும் இவரது பணிக் காலத்திலேயே நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.