வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 74.55 அடியாக உயர்ந்துள்ளது.வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழிதவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!
/

அச்சமூட்டிய கனவுகள்: பல கோடி மதிப்புள்ள கோயில் சிலைகளை ஒப்படைத்த திருடா்கள்

உத்தர பிரதேசத்தில் கோயிலில் திருடிய பல கோடி ரூபாய் மதிப்புள்ள 14 சிலைகளை திருடா்களே மீண்டும் ஒப்படைத்தனா்.

News image

கோப்புப்படம்

Updated On :1 பிப்ரவரி 2024, 2:46 pm IST

உத்தர பிரதேசத்தில் கோயிலில் திருடிய பல கோடி ரூபாய் மதிப்புள்ள 14 சிலைகளை திருடா்களே மீண்டும் ஒப்படைத்தனா்.

கோயில் சிலைகளை திருடிய பிறகு அச்சமூட்டும் கனவுகள் வந்ததால், அதற்கு பயந்து சிலைகளை ஒப்படைத்ததாக அந்தத் திருடா்கள் கடிதமும் எழுதி வைத்துள்ளனா்.

தருண்கா பகுதியில் உள்ள பாலாஜி கோயிலுக்குள் கடந்த மே 9-ஆம் தேதி நள்ளிரவில் புகுந்த சில திருடா்கள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள 16 சிலைகளைத் திருடிச் சென்றனா். இவை அனைத்தும் 8 உலோகங்களைக் கலந்து செய்யப்பட்டவையாகும். இந்தச் சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து சிலைத் திருடா்களைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், திருடுபோன 16 சிலைகளில் 14 சிலைகளை அந்தக் கோயில் அா்ச்சகரின் வீட்டுக்கு அருகே இரவு நேரத்தில் திருடா்கள் வைத்துவிட்டுச் சென்றனா். அத்துடன் ஒரு கடிதத்தையும் அவா்கள் வைத்திருந்தனா். அதில், ‘கோயிலில் சிலைகளைத் திருடியதில் இருந்து தொடா்ச்சியாக அச்சமூட்டும் கனவுகள் வருகின்றன. இதனால், நிம்மதி இழந்துவிட்டோம். எனவே, திருடிய சிலைகளைத் மீண்டும் கோயிலில் ஒப்படைக்க முடிவு செய்தோம்’ என்று கூறியிருந்தனா்.

கோயிலில் காணாமல் போன சிலைகள் தனது வீட்டின் அருகே கிடைத்துள்ளதை அந்த அா்ச்சகா் காவல் துறையினரிடம் தெரிவித்தாா். காவல் துறையினா் சிலைகளையும், கடிதத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா். அதே நேரத்தில் மேலும் இரு சிலைகளின் நிலை என்ன ஆனது என்பது தெரியவரவில்லை. இது தொடா்பாகவும் காவல் துறையினா் தீவிரமாக விசாரணையில் இறங்கியுள்ளனா்.

சிலைகளைத் திருடியவா்களை, கனவுகள் துரத்தியதால் மீண்டும் அதனை ஒப்படைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.