தில்லியில் கனமழை: விமான சேவைகள் பாதிப்பு

தில்லியில் இன்று அதிகாலை பெய்த கனமழை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 
தில்லியில் கனமழை: விமான சேவைகள் பாதிப்பு

தில்லியில் இன்று அதிகாலை பெய்த கனமழை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று அதிகாலை கனமழை பெய்தது. தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் பல இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. 

இதனால் ஆங்காங்கே சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். சாலைகளில் முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் தலைநகரில் இன்று அதிகாலை பெய்த கனமழை காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளன. தில்லியைத் தவிர உத்தரப் பிரதேசமம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களிலும் இன்று அதிகாலை பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com