மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் அனில் தேஷ்முக் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த அனில் தேஷ்முக், உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசில் உள்துறை அமைச்சராக இருந்தாா். அப்போது, மும்பையில் உள்ள மதுபான விடுதிகள், ஹோட்டல்கள் ஆகியவற்றிடம் இருந்து மாதந்தோறும் ரூ.100 கோடி லஞ்சம் வசூலித்துத் தருமாறு போலீஸாரை கட்டாயப்படுத்தியதாக அப்போதைய காவல் ஆணையா் பரம்வீா் சிங் குற்றம்சாட்டினாா்.
இதையும் படிக்க- 52வது கேரள அரசின் திரைப்பட விருதுகள்
அனில் தேஷ்முக் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ததை அடுத்து, தனது பதவியை ராஜிநாமா செய்தாா். சிபிஐ வழக்குப் பதிவு செய்ததன் அடிப்படையில் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அதைத் தொடா்ந்து, கடந்த நவம்பரில் அவர் கைது செய்யப்பட்டு மும்பை ஆா்தா் சாலை சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்த நிலையில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் மார்பு வலி காரணமாக அனில் தேஷ்முக் மும்பையில் உள்ள கெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், தனியார் மருத்துவமனையில் தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்ய அனுமதி கோரிய தேஷ்முக்கின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனிருத்தின் அரவிந்த் பாடல்!
எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது நீக்குதல் இலவசப் பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



