8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

நடுங்கும் இமாசலப் பிரதேசத்தையே சூடேற்றும் போஸ்டர் போர்

தட்பவெப்பநிலையால் நடுங்கும் இமாசலப் பிரதேசத்துக்கு, சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், தேர்தல் காய்ச்சல் பற்றிக் கொண்டது.

நடுங்கும் இமாசலப் பிரதேசத்தையே சூடேற்றும் போஸ்டர் போர்

Published On :1 பிப்ரவரி 2024, 4:17 pm IST


தட்பவெப்பநிலையால் நடுங்கும் இமாசலப் பிரதேசத்துக்கு, சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், தேர்தல் காய்ச்சல் பற்றிக் கொண்டது.

ஒரு பக்கம், தேர்தல் பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் என களைகட்டத் தொடங்குவதற்கு முன்பே, பல இடங்களில் போஸ்டர் போர் தொடங்கிவிட்டதாம்.

மாநிலத்தின் நடு மையமாக விளங்கும் சிம்லாவின் மால் சாலைப் பகுதியின் பல இடங்களில் மிகப்பெரிய போஸ்டர்கள் நிறைந்துள்ளன.  அதிலும் குறிப்பாக அங்குள்ள பல அடுக்குமாடிகளைக் கொண்ட வணிக மையம்தான், போஸ்டர் போர் நடக்கும் களமாகவே மாறிவிட்டிருக்கிறதாம்.

ஒரு பக்கம் காங்கிரஸ், மறுபக்கம் பாஜக போஸ்டர்கள் முழுக் கட்டடத்தையும் மறைத்துக் கொண்டுள்ளன. மக்கள் இதைப் பார்த்து கட்சிகள் மீது ஆர்வம் கொள்வார்கள் என்றால், பலரும் இதைப் பார்த்து சிரித்துவிட்டுத்தான் போகிறார்களாம்.

காங்கிரஸ் வைத்திருக்கும் போஸ்டரில், காங்கிரஸ் ஆட்சிக்கு வரப்போகிறது எனவும், பாஜக முதல்வரின் பதவியேற்கும் விழா விரைவில் என்றும் சபாஷ் சரியான போட்டி என்று சொல்லுமளவுக்கு போர் மூண்டுள்ளது.

இமாசலப் பிரதேசம் எப்போதும் அமைதியான பகுதியாக இருக்கும். தேர்தல் வந்தாலும் கூட இங்கு மேற்கு வங்கத்தைப் போலவோ, உத்தரப்பிரதேசத்தைப் போலவோ அனல்பறக்கும் வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும். ஆனால் இந்த முறை, சப்தமில்லாமல் போஸ்டர் போர் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.