காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறுமா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்

வங்கக் கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது புயலாக மாறுமா என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறுமா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறுமா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்


சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய வங்கக் கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது புயலாக மாறுமா என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருக்கும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அவர் கூறியிருப்பதாவது, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய வங்கக் கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது அடுத்த 48 மணி நேரத்தில் சற்று வலுப்பெறும்.  இது மெல்ல 12ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் தமிழகம், புதுவை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் 9 ஆம் தேதி ஒரு சில இடங்களிலும், 10ஆம் தேதி அநேக இடங்களிலும், 11, 12, 13ஆம் தேதி பெரும்பாலான இடங்களிலும் மழை பெய்யக் கூடும்.

கனமழையைப் பொறுத்தவரை 

நவம்பர் 9, 10ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நவம்பர் 11, 12ஆம் தேதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிகக் கனமழை பெய்யக் கூடும். 13ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காரைக்காலில் 6 செ.மீ.  மழை பதிவாகியுள்ளது. 

மீனவர்கள் நாளை முதல் 12ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென் தமிழக கடற்கரை கரை, தெற்கு ஆந்திர கடற்கரை, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதாலும், பலத்த காற்றுடன் மழை பெய்யக் கூடும் என்பதாலும் மீனவர்கள் இங்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

சென்னையைப் பொறுத்தவரை 

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 10ஆம் தேதி நகரின் ஒரு சில பகுதிகளில் கனமழையும் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் கன முதல் மிகக் கனமழையும், 13ம் தேதி கனமழையும் பெய்யக் கூடும். 

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது புயலாக மாற எந்த வாய்ப்பும் கிடையாது. தொடர்ந்து அது வட மேற்கு கரையை ஒட்டி வரும். இதனால் கடற்கரையோர  மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கரையை கடக்குமா, கரையை ஒட்டி நகருமே என்பது இதுவரை தெரியவரவில்லை. அடுத்த 4 நாள்களுக்கு, கரையை ஒட்டி வருவதை மட்டுமே கணிக்க முடியும்.

காற்றழுத்த தாழ்வு பெரும்பாலும் பரவியிருப்பதால், பரவலான மழை பெய்யும். 
அது கரையை கடக்குமா அல்லது மேலே நோக்கிச் செல்லுமா என்பதை பிறகுதான் தெரியவரும் என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெய்திருக்கும் மழை நிலவரம்

அக்டோபர் முதல் இன்று வரை  தமிழகத்தில் ஒட்டுமொத்தமாகபதிவான மழை அளவு 238 மி.மீ. இயல்பாக இந்தக் காலக்கட்டத்தில் பெய்திருக்க வேண்டிய மழை அளவு 244 மி.மீ. எனவே, இது 2 சதவீதம் இயல்பை விட குறைவு.

அதுபோல, இன்று வரை சென்னையில் பெய்திருக்கும் மழை அளவு 46 செ.மீ. வழக்கமாக பெய்ய வேண்டிய மழை அளவு 40 செ.மீ. இயல்பை விட இது 13 சதவீதம் அதிகம் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com