பஞ்சாப் மாநிலம் அமிர்தசரல் அருகே திங்கள்கிழமை(நவ.14) அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.1 ஆகப் பதிவாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து மேற்கு-வடமேற்கில் 145 கிமீ தொலைவில் திங்கள்கிழமை அதிகாலை 3.42 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.1 ஆகப் பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க | தோ்தலில் போட்டியில்லை: பிரசாந்த் கிஷோா்
நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 120 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.