புது தில்லி: காங்கிரஸ் கட்சிக்கு சாபமிடுவதற்கு பதிலாக, குஜராத் மாநிலத்தில் பாஜக செய்த தவறான ஆட்சிமுறை குறித்து பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு எடுத்துச் சொல்லலாமே என்று கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சி குறித்து பிரதமர் பேசிய கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. 500 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டன: நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்
குடியரசுத் தலைவர் தேர்தேலில் திரௌபதி முர்மு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் காங்கிரஸ் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கி அரசியலை நடத்துவதாகவும், சமூக விரோதிகளுக்கு ஆதரவு அளிக்கும் கட்சி என்றும் சரமாரியானக் குற்றச்சாட்டுகள் பிரதமர் வைத்திருந்தார்.
இவற்றுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருக்கும் கார்கே, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சிக்கு சாபமிடுவதற்கு பதிலாக, குஜராத்தில் பாஜக செய்த தவறான ஆட்சிமுறை குறித்து மக்களுக்கு எடுத்துச் சொல்லலாம். ஏன் குஜராத்தில் உள்ள குழந்தைகளின் எதிர்காலத்தை வீணாக்குகிறீர்கள்? சத்துணவு பெற்ற, எடை குறைவான குழந்தைகளைக் கொண்ட 30 மாநிலங்களின் பட்டியலில் குஜராத் ஏன் 29வது இடத்தில் இருக்கிறது? குழந்தைகள் இறப்பு விகிதத்தில் குஜராத் ஏன் 19வது இடத்தில் இருக்கிறது என்பதற்கு பதில் இருக்கிறதா? என்றும் கார்கே கேட்டுள்ளார்.