ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

நொய்டா குடியிருப்புகளில் விரைவில் தண்ணீர் அளவீட்டுக் கருவி பொருத்தம்

நொய்டாவில் உள்ள அனைத்து குடியிருப்புகளிலும் தண்ணீர் பயன்பாடு அளவீடு செய்வதற்கான கருவி பொருத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

News image
கோப்புப் படம்
Updated On :12 அக்டோபர் 2022, 10:15 am

DIN

நொய்டாவில் உள்ள அனைத்து குடியிருப்புகளிலும் தண்ணீர் பயன்பாடு அளவீடு செய்வதற்கான கருவி பொருத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

நாட்டில் தண்ணீர் பயன்பாட்டை முறைப்படுத்துவதாகக் கூறி பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. 

இந்நிலையில் நொய்டாவில் உள்ள அனைத்து குடியிருப்புகளிலும் தண்ணீர் மீட்டர் கருவி பொருத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீணாகும் தண்ணீரை கணக்கிடவும், அதீத தண்ணீர் பயன்பாட்டை தடுக்கவும் இந்த அளவீட்டு கருவி பொருத்தப்படுவதாகத் தெரிவித்த அதிகாரிகள் விரைவில் இந்தப் பணி நிறைவடையும் என உறுதி தெரிவித்துள்ளனர். 

குறைவான தண்ணீரை பயன்படுத்துபவர்கள் குறைவாகவும், அதிகமாக தண்ணீரை உபயோகிப்பவர்கள் அதற்கேற்றாற் போல கட்டணம் செலுத்தும் சூழலும் உருவாகும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 

ஏற்கெனவே 400 குடியிருப்புகளில் இந்த அளவீட்டுக் கருவி பொருத்தப்பட்ட நிலையில் இந்த மாத இறுதிக்குள் மேலும் 370 குடியிருப்புகளில் தண்ணீர் அளவீட்டுக் கருவி பொருத்தப்படும் என இந்தத் திட்டத்தின் சிறப்பு அலுவலர் அவினாஷ் திரிபாதி தெரிவித்துள்ளார். 

எனினும் இந்த முறைக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தண்ணீரை வணிக உற்பத்திக்காக பயன்படுத்தும் பெரும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசு சாதாரண மக்களுக்கு கிடைக்கும் பற்றாக்குறையான தண்ணீருக்கும் விதிக்கும் கட்டுப்பாடு ஆபத்தானது என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.