தெலங்கானா ராஷ்டிர சமிதியின் முக்கிய நிர்வாகியாக கருதப்படும் பூர நர்சய்யா கௌட் அக்கட்சியில் இருந்து இன்று விலகினார்.
தெலங்கானா ராஷ்டிர சமிதியின் முக்கிய நிர்வாகியும் போங்கிரின் முன்னாள் எம்பியுமானவர் பூர நர்சய்யா கௌட். இவர் தெலங்கானா தனி மாநில கோரிக்கையில் முக்கிய பங்கு ஆற்றியிருக்கிறார். இந்தநிலையில் பூர நர்சய்யா, தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை எனக் கூறி கட்சியில் இருந்து இன்று விலகினார்.
மேலும் அவர் தனது ராஜிநாமா கடிதத்தையும் கட்சி மேலிடத்திடம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல்வாதியான என்னால் கட்சியில் கடமையைச் செய்ய முடியவில்லை. எங்களைக் கலந்து ஆலோசிக்காமல் கே.சி.ஆர், பாரத் ராஷ்டிர சமிதியை தொடங்கினார். செய்திகள் மூலம்தான் நாங்கள் தெரிந்துகொண்டோம்.
எனது ராஜினாமா கடிதத்தில் முதல்வரை விமர்சிக்கவில்லை, உண்மைகளை மட்டுமே எழுதினேன்.
டிஆர்எஸ் குடும்பத்தை விட்டு பிரிந்தபோது மிகுந்த வேதனையை அனுபவித்தேன். இவ்வாறு அவர் கூறினார். இருப்பினும், பூர நர்சய்யா தனது அரசியல் எதிர்காலம் குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. ஆனால் பாஜகவுக்கு நெருக்கமான வட்டாரங்களின்படி, அவர் விரைவில் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்கசிவால் 20 வீடுகளில் மின்சாதனங்கள் தீப்பிடித்து சேதம்

பலாப்பழம் தலையில் விழுந்து காயமடைந்த பெண் உயிரிழப்பு

நாய்களால் துரத்தப்பட்ட 2 வயது பெண் மான் மீட்பு

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



