துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: நாளை சசி தரூர் வேட்புமனு தாக்கல்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் கேரள எம்.பி. சசிதரூர், வெள்ளிக்கிழமை (செப். 30) தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:57 pm IST

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் கேரள எம்.பி. சசிதரூர், வெள்ளிக்கிழமை (செப். 30) தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
 இதையொட்டி, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரபல உருது பாடல் ஒன்றை புதன்கிழமை பதிவேற்றம் செய்துள்ளார்.
 இந்த வாரத் தொடக்கத்தில் சசிதரூர் கூறுகையில், "அகில இந்திய காங்கிரல் கமிட்டியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட நாட்டின் அனைத்துத் தரப்பில் இருந்தும் கட்சித் தொண்டர்கள் எனக்கு ஆதரவளித்துள்ளனர். வரும் 30-ஆம் தேதி காலை 11 மணியளவில் வேட்புமனுவைத் தாக்கல் செய்யவுள்ளேன்' எனத் தெரிவித்திருந்தார்.
 இந்நிலையில், அவர் புதன்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில், பிரபல உருது கவிஞர் மஜ்ரூ சுல்தான்புரியின் பாடல் வரிகளைப் பதிவேற்றம் செய்துள்ளார். "நான் எனது பயணத்தைத் தொடங்கினேன். தற்போது மக்கள் என்னுடன் இணைந்துள்ளனர் என பாடல் வரி சொல்கிறது.
 இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: எனது வேட்புமனுவைத் தாக்கல் செய்யும்போது நான் மகிழ்ச்சியுடன் இருப்பதையும் எனக்கு கட்சித் தொண்டர்களின் ஆதரவையும் நீங்கள் காண்பீர்கள். அனைத்து மாநிலங்களிலும் இருந்தும் பெருவாரியான கட்சித் தொண்டர்களின் ஆதரவு எனக்கும் கிடைக்கும்பட்சத்தில் இந்தப் போட்டியில் நானும் முக்கிய இடம் பிடிப்பேன். இந்தப் போட்டியில் கலந்துகொள்ளுமாறு நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கட்சித் தொண்டர்கள் என்னிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.