மக்களவையில் நடந்துவரும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் உரையாற்ற பிரதமர் மோடி மக்களவைக்கு வந்துள்ளார்.
மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மூன்றாவது நாளாக இன்று விவாதம் நடைபெற்று வருகிறது.
"பாரத் மாதா கி ஜெய்" என முழக்கமிட்டும், மேஜைகளை தட்டியும் பாஜக எம்.பி.க்கள் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்குப் பதிலளிக்க உள்ளார்.